வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு போக கூடாது ஏன் தெரியுமா அதற்கான அறிவியல் காரணம் தெரியுமா..?

Updated On: March 20, 2025 6:22 PM
Follow Us:
eating non veg after visiting temple in tamil
---Advertisement---
Advertisement

அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்லலாமா?

நண்பர்களே வணக்கம்.! இன்றைய பதிவில் அனைவருக்கும் உள்ள கேள்விக்கான பதிலாக இருக்கும்.! அனைவரும் கோவிலுக்கு செல்வோம், அதேபோல் அசைவோம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகக்கூடாது ஏன் சொல்கிறார்கள் தெரியுமா..? எப்போவது யோசித்தது உண்டா கோவிலுக்கு போகக்கூடாது என்று. அப்படி யோசித்தவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் வாங்க ஏன் என்று தெரிந்துகொள்ளலாம்.

அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்லலாமா?

asaivam sapituvittu koviluku sellalama

அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு போலாமா என்ற கேள்வி பலருக்கும் இருந்து கொண்டே இருக்கும். நாம் சாமி கும்பிடுவதற்கும் சாப்பிடுவதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்றும் சிலர்நினைப்பார்கள். நாம் கோவிலுக்கு செல்வது இறைவனை வழிபடத்தானே மனம் தூய்மையாக இருந்தாலே போதும் ஆனால் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது சைவம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போக வேண்டும் பெரியவர்கள் சொல்வது சற்று யோசிக்க தான் வைக்கும்.

மற்ற மதத்தில் அப்படி எந்த நாகரிகமும் கிடையாது ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அப்படி ஒரு பாரம்பரியமாக உள்ளது. அதேபோல் நாம் உண்ணும் உணவுகள் மனதிற்கு சம்பந்தம் உண்டு எடுத்துக்காட்டாக நாம் தயிர் சாப்பிட்டோம் என்றால் தூக்கம் வருவது போலும் ஒரு மாதிரி மந்தமாக இருப்பது போல் இருக்கும்.

அதேபோல் காரம் சாப்பிட்டால் கோவமாக இருப்பது போல் உணர்வு இருக்கும். அதேபோல் அசைவ உணவு சாப்பிட்டால் விரைவில் சாப்பிட உணவு செரிமானம் ஆகுவதற்கு அதிக நேரம் எடுக்கும்.

கோவிலுக்கு செல்லும் போது மனம் சுத்தமாக இருந்தால் போதும் ஆனால் இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லும் போது மந்தமாக போகும் போது அங்கு கிடைக்கும் ஆற்றல் நம்மில் சேராது.

கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ?
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

கோவிலுக்கு செல்வது எதற்காக நம்முடைய பாவத்தை போக்கி புண்ணியத்தை சேர்க்க தான் அப்படி இருக்கும்பட்சத்தில் பிற உயிர்களை கொன்று சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு சென்றால் பாவத்தோடு கடவுளின் சாபத்தையும் பெறுவதற்கு சமம்.

ஆனால் நாம் முன்னோர்கள் செய்த ஒவ்வொன்றிலும் அறிவியல் ரீதியாக காரணம் உள்ளது அந்த வகையில் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என்று சொல்ல அறிய காரணம் என்னவென்றால் கோவிலுக்கு நாம் மனதை நிம்மதிக்காக செல்கிறோம்.

 அப்போது நாம் அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு சென்றால் அந்த அசைவ உணவில் உள்ள புரோட்டின் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது. ஆகவே அதனை சாப்பிட்டு செல்லும் பொழுது அதாவது ஏப்பம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் தான் அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்ல கூடாது என்றும் அதன் மூலம் அவர்களின் மனதை ஒருநிலை படுத்த முடியாது என்றும் சொல்லப்படுகிறதை.  

இதையும் தெரிந்துகொள்ளவோம் 👉👉 கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை