முருங்கைக்காய் சாம்பார் தான் எல்லாரும் செய்திருப்போம்.. ஆனா முருங்கைக்காயில் பிரியாணி செஞ்சிருக்கீங்களா? Murungakkai Biryani
சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டு உணவுகளுக்கும் பயன்படுத்தப்படும் காய் தான் முருங்கை காய். அசைவ உணவில் முருங்கைக்காய் பயன்படுத்துகின்றோமோ இல்லையோ கண்டிப்பாக சைவ உணவுகளில் முருங்கைக்காய் பயன்படுத்துவோம். முருங்கை காய் ஆரோக்கியம் வாய்ந்த காய் வகை ஆகும்.
இந்த முருங்கைக்காயில் பிரியாணி என்பது இது வரை யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் முருங்கைக்காயில் பிரியாணி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி? அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தக்காளி இல்லாமல் பூண்டு மிளகு ரசம் வைப்பது எப்படி.?
முருங்கைக்காய் பிரியாணி செய்முறை
Ingredients
- அரிசி - 3 கிலோ
- முருங்கைக்காய் - 1 & 1/2 கிலோ
- வெங்காயம் - 1 & 1/4 கிலோ
- தக்காளி - 900 கிராம்
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கை அளவு
- புதினா இலைகள் - ஒரு கை அளவு
- பச்சை மிளகாய் - 12
- இஞ்சி பூண்டு விழுது - 300 கிராம்
- எலுமிச்சை - 2
- ரம்பை இலை - தேவையான அளவு
- தயிர் - 800 மிலி
- நெய் - 250 மிலி
- எண்ணெய் - 500 மிலி
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - 30 கிராம்
- இலவங்கப்பட்டை - 10 கிராம்
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 5
- பெருஞ்சீரகம் - 5 கிராம்
- சீரகம் - 5 கிராம்
- இரண்டு தேங்காயின் - பால்
- அன்னாசிப்பூ
- உப்பு - தேவையான அளவு
Instructions
முருங்கைக்காய் பிரியாணி செய்முறை:
- ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அதில் முருங்கையக்காயை கட் செய்து சேர்க்கவும்,
- பின் அதனுடன் 1/2 லிட்டர் தயிர், மிளகாய் தூள் 30 கிராம், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் முருங்கைக்காய்க்கு தேரையான உப்பு சேர்த்து பிசைந்தது குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
- அரை மணி நேரம் ஆன பிறகு அடிகனமான ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் 500 கிராம் எண்ணெய் 1/4 லிட்டர் நெய் சேர்த்து சூடுபடுத்தவும்.
- எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு மற்றும் சீரகம் இவை அனைத்தயும் சேர்த்து பொரியவிட வேண்டும்.
- பிறகு கட் செய்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு சிவந்து வந்த பிறகு கட் செய்து வைத்துள்ள ரம்பை இலை சேர்த்து ஒரு முறை வதக்க வேண்டும். பிறகு அதனுடன் மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வேண்டும். இஞ்சி பூண்டு விழுதினை பச்சை வாசனை நீங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
- தக்காளி வன்தங்கிய பிறகு 300 கிராம் தயிர் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி நன்றாக வதக்கவும்.
- பின்பு மசாலா சேர்த்து பிசைந்து வைத்துள்ள முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும்.
- பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு தேங்காயில் இருந்து எடுத்த பால் மற்றும் அரிசி தேவையான அளவு தண்ணீர் இவை இரண்டியும் ஒன்றாக ஊற்றில் தண்ணீரை அளந்து எடுத்து கொண்டு அதனை ஊற்றவும்.
- தண்ணீர் நன்கு கொத்தி வந்தும் 20 நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை அவற்றில் சேர்த்து நன்றக கிளறிவிடுங்கள்.
- தண்ணீர் மற்றும் அரிசி இவை இரண்டும் சம அளவு வரும் வரை அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும். அரிசியானது 80 சதவீதம் வெந்து வந்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடி அதன் முது நல்ல கனமான பொருளை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அடுப்பை முழுமையாக அணைத்து ஒரு 15 நிமிடம் தம் போட வேண்டும். அவ்வளவு தான் சுவையான முருங்கைக்காய் பிரியாணி தயார்.
- இந்த முறையில் உங்கள் வீட்டில் ஒரு முறை பிரியாணி செய்து பாருங்கள், கண்டிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி செய்வது எப்படி.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |