வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

Updated On: August 22, 2025 6:32 PM
Follow Us:
why is ganesh idol immersed in water in tamil
---Advertisement---
Advertisement

Why is Ganesh Idol Immersed in Water in Tamil | விநாயகரை நீரில் கரைப்பது ஏன்

பொதுவாக விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே விநாயகர் சிலை வாங்கி வந்தோ அல்லது வீட்டிலே செய்து அதற்கு பூஜை செய்து வழிபடுவோம். அதன் பிறகு, விநாயகர் சதுர்த்தி அன்றோ அல்லது விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளோ விநாயகர் சிலையை ஆற்றிலோ குளத்திலோ அல்லது ஓடும் நீரிலோ கரைப்பது வழக்கம். ஆனால் ஏன் அப்படி கரைக்கிறார்கள் என்று நம்மில் பலபேருக்கும் தெரியாது. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

விநாயகர் சிலையை நீரில் கரைக்க காரணம் இதுதான்:

why is ganesh idol immersed in water in tamil

ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும். அப்படி வேகமாகவும் அதிகமாகவும் வரும் வெள்ளத்தால் ஆற்றில் உள்ள மணல் எல்லாம் அரித்து கொண்டு கடலுக்குள் சென்று விடும். எனவே ஆற்றில் மணல் இல்லாததனால்,  நீரை உறிஞ்சி நிலத்திற்குள் தக்கவைத்து கொள்ளாமல் போகிறது.

இதனால் அடுத்து வரும் வெயில் காலங்களில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக தான் ஆடிக்கு பிறகு வரும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆற்றில் கரைக்கிறார்கள். இதற்கும் விநாயகரை ஆற்றில் கரைப்பதற்கு என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள் தெளிவாக கூறுகிறேன்.

களிமண்ணிற்கு நீரை உறிஞ்சி நிலத்தில் தக்கவைத்து கொள்ளும் தன்மை கொண்டது. எனவே களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் போது அவை மணலில் தேங்கி விடுகிறது.  இதனால் களிமண் ஆனது  நீரை உறிஞ்சி நிலத்தில் தக்க வைக்கிறது. இதனால் வெயில் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சம் குறைகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?

மற்றொரு வரலாறு கூறுவது என்ன..?

களிமண் தெய்வீக சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்ட பிறகு அதனை ஆற்றில் கரைப்பதன் மூலம் அதன் தெய்வீகத்தன்மை வெளிப்பட்டு மக்களுக்கு ஏராளமான நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விநாயகரை ஆற்றில் கரைக்கும் போது அந்த தண்ணீர் ஆவியாகி மழையாக பொழிந்து தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கிறது என்றும் கூறப்படுகிறது.

துக்க வீடுகளில் பறை அடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How Did The Name Tirupati Laddu Come About in Tamil

திருப்பதி லட்டுக்கு பெயர் எப்படி வந்தது..?

கார்த்திகை நாளில் சொக்கப்பனைகொளுத்துவது ஏன் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?

The Reason For its Name is Lemon in Tamil

எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

punnai tree in tamil

புன்னை மரம் எப்படி இருக்குமுன்னு உங்களுக்கு தெரியுமா.?

Hat Trick Meaning in Cricket

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்..! இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

Why does applying honey on the head turn white in tamil

தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா..? இது உண்மையா..? பொய்யா..?

maximum age difference for marriage in tamil

ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று தெரியுமா.?